கடந்த 2 நாட்களில் மட்டும் விபத்துக்களால் 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

பண்டிகை காலத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் மேற்படி 412 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும் டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துகளில் பெரும்பாலானவை வீடுகளில் இடம்பெற்றவை எனவும், அவ்வாறு 110 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *