ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு வடகொரியா கடும் கண்டனம்:

ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை வடகொரியா கண்டித்துள்ளது.

ஈரானின் பாதுகாப்பு நலன்கள் மிக மோசமாக மீறப்பட்டது என தெரிவித்துள்ள  வடகொரியா ஈரானின் ஆள்புல உரிமைகளும் மீறப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேற்குலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட இஸ்ரேலின் இடைவிடாத போர் நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய விரிவாக்கத்தினால் உருவான மத்திய கிழக்கின் பதட்டங்களிற்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே குற்றவாளிகள் என வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன்களை வன்முறையாக நசுக்கிய அமெரிக்காவின் தாக்குதலை வடகொரியா கடுமையாக கண்டிக்கின்றது என  அந்த நாட்டின் வெளிவிவகார பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *