இன்றும் 3 மனித எச்சங்கள் மீட்பு – இதுவரை 9 மனித எச்சங்கள் முழுமையாக கண்டெடுப்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாளான இன்றைய (13/09/2023) அகழ்வுப்பணீகளின் போது மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடையப் பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட 3 மனித அச்சங்கள் உட்பட மொத்தமாக இதுவரை 09மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அகழ்வாய்வுப் பணிகளுக்கென, 5.7மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து அடுத்தவாரமும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டால் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள நிதி போதுமானதாக உள்ளதாகவும் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *